செங்கம், மே 12 –
செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களில் செ.கார்த்திக் ராஜா என்ற மாணவர் 532 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பெற்றார். இதில் முதல் மூன்று மாணவர்கள் உயிரியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை ராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி சதுர்புஜானந்தர், பள்ளி நிர்வாக தலைவர் பாண்டுரங்கன், செயலாளர் ராமமூர்த்தி, தலைமை ஆசிரியர் ஏழுமலை மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.



