மார்த்தாண்டம், அக். 7 –
பளுகலை அடுத்த பெரும்பிலாந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பென்னட் மனைவி பிளாரன்ஸ் (40). இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் சௌமியா (16) என்பவர் பணங்காலை என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். வன்னியூர் மலையடி பகுதி சேர்ந்தவர் ஜார்ஜ் மகன் நிகில் (14). மேக்கோடு அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவ தினம் சௌமியா தனது நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு நிகிலின் பைக்கில் பின்னால் அமர்ந்து மூவாட்டுகோணத்திலிருந்து கண்ணுமாமூடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது நிகில் பைக்கை வேகமாக ஓட்டியதாக கூறப்படுகிறது.
இதில் பைக் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலையோரம் மின்கம்பத்தில் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு நிகிலை காரக்கோணம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சௌமியாவை குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சௌமியா குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


