விளாத்திகுளம், ஆகஸ்ட் 20 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் முன்னாள் யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் பால்ராஜ், நகரச்செயலாளர் மாரிமுத்து, மகளிர் அணி நிர்வாகி பிரியா, சாந்தி உட்பட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் தமிழ் புலிகள் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.



