சுசீந்திரம், ஜூன் 22 –
சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவிலில் உட்பிறகாரம் நடராஜர் மூர்த்தி சன்னதி உள்ளது. இந்த நடராஜ மூர்த்திக்கு சித்திரை திருவோணம் ஆனி உத்திரம் ஆவணி சதுர்த்தசி புரட்டாசி சதுர்த்தசி மார்கழித் திருவாதிரை மாசி சதுர்த்தசி ஆகிய 6 நாட்களில் நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம்.
அதுபோல ஆனி உத்திரத்தை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு நடராஜ மூர்த்திக்கு பால் தயிர் பஞ்சாமிர்தம் இளநீர் சந்தனம் குங்குமம் திருநீறு எலுமிச்சை சாறு மாதுளைச் சாறு களபம் உட்பட்ட நறுமணப் பொருட்களால் திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. பின்பு அலங்கரிக்கப்பட்ட நடராஜமூர்த்திக்கு அலங்கார தீபாரதனையும் நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் பெருமளவு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



