தஞ்சாவூர், ஜனவரி 6 –
தஞ்சாவூர் நகைச்சுவை மாமன்றம் சார்பில் விருது வழங்கும் விழா தஞ்சாவூரில் நடைபெற்றது.
விழாவில் கலைமாமணி டாக்டர் நரேந்திரன் தலைமை தாங்கினார். மாமன்ற செயலாளர் ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்வில் கரந்தை தமிழ் சங்க செயலாளர் இரா. சுந்தரவதனுக்கு கல்வி சேவை மற்றும் அரசு நூலகம் அமைவதற்க்கு ரூபாய் 1 கோடி பெறுமான இடத்தை தானம் வழங்கியதை பாராட்டியும் “சேவை செம்மல் “விருதை டாக்டர் நரேந்திரன் வழங்கினார் மற்றும் தன்னார்வ சேவை பணிகளை பாராட்டி அழகம்மாள் நகர் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் கோ.தனபாலகிருஷ்ணன், அம்மாபேட்டை த.முருகேசன் ஆகியோருக்கு ‘சேவை திலகம்’ விருதும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ‘மகிழ்வோம், மகிழ்விப்போம்’ என்ற தலைப்பில் ஆடுதுறை அழகு பன்னீர்செல்வம் சிறப்பான நகைச்சுவை உரையாற்றினார். முன்னதாக இந்துமணியின் இசை விருந்தும், நடைபெற்றது.



