கன்னியாகுமரி, செப். 27 –
அஞ்சுகிராமத்தில் அமைந்துள்ள அரசு கிளை நூலகம் மத்திய அரசின் மாநில அரசுக்கான சிறப்பு உதவித்திட்ட நிதியில் (2023-24) இருந்து ரூபாய். 22 லட்சம் செலவில் கட்டப்பட்ட கூடுதல் விரிவாக்க கட்டிடத்தை நேற்று காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அரசு கிளை நூலக வாசகர் வட்டத்தலைவர் ஜோஸ் திவாகர் தலைமை தாங்கினார். பொருளாளர் எஸ்.ஜெஸீம் செயற்குழு உறுப்பினர்கள் ஹிட்லர், எஸ்.பி. பாலன், எழிலரசன், ஜெயக்கொடி, கவுன்சிலர் இராஜபாண்டியன், மணிகண்டன், சுதன், ராமகிருஷ்ணன், தினேஷ், பிரதீஷ் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு கிளை நூலகர் கிரேஸ்லெட் செல்வின் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. அஞ்சுகிராமம் பேரூராட்சி தலைவர் ஜானகி இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பச்சைமால், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு, செயல் அலுவலர் உஷா கிரேஸி, அஞ்சு கிராமம் பேரூர் திமுக செயலாளர் இளங்கோ, துணைத்தலைவர் காந்திராஜ், கவுன்சிலர்கள் வீடியோகுமார், ராமச்சந்திரன், ராஜேஸ்வரி, தனம், முன்னாள் கவுன்சிலர் கணபதி, ஒன்றிய திமுக பிரதிநிதி ராஜேந்திரன், அருணாச்சலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



