திருப்பூர், மார்ச் 12 –
திருப்பூரில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மகிலா காங்கிரஸ் சார்பில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், சாலையில் விறகு அடுப்பு வைத்தும் நூதன முறையில் மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் கடைகளுக்கான எரிவாயு சிலிண்டர்களுக்கு விலை ஏற்றியதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர் மாவட்ட மகிலா காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு மாநகர் மாவட்ட தலைவி.ஆஷா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கமிட்டியின் மாநகர் மாவட்ட தலைவர் கோபால்சாமி கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினார்.
மகிலா காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் சாந்தி, அஃப்ரோ ஜான் பேகம், சுலோச்சனா தேவி, சுசிலா, குருவம்மா, ரேவதி, கமலம், ராதா, பாக்கியலட்சுமி, ஐஎன்டிசி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், அரிமா வெங்கடேஷ், ஜெயின் லாப்தீன் ஹாஜா பாபு நடராஜ் கிருஷ்ணதாஸ், கோவிந்த் சீனிவாசன் செந்தில், கதிரேசன் தொடர்ந்து மகிலா காங்கிரஸ் கட்சியினர் சாலையில் விறகு அடுப்பு வைத்து சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மலர் மாலை அணிவித்து ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் மகிலா காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் பலர் கலந்து கொண்டனர்.



