கோவை, ஜூன் 13 –
கோவையின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான சான்பிரிக்ஸ் பிராப்பர்டீஸ் தனது புதிய வணிக மைல்கல்லான சான்பிரிக்ஸ் பிசினஸ் சென்டர் வளாகத்தை கோவையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சான்பிரிக்ஸ் பிராப்பர்டீஸ், தரம், நம்பிக்கை மற்றும் சொன்ன நேரத்தில் திட்டங்களை ஒப்படைப்பது ஆகியவற்றை அடிப்படை கொள்கைகளாகக் கொண்டு கடந்த 14 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று வளர்ந்து வரும் நிறுவனமாகும்.
தற்போது கோவையின் முக்கிய வணிக மையமாக வளர்ந்து வரும் நவ இந்தியா பகுதியில், சுமார் 70,000 சதுர அடி பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த புதிய வணிக வளாகத்தை நிறுவனம் உருவாக்கியுள்ளது. சர்வதேச விமான நிலையம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் முக்கிய போக்குவரத்து வசதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளதால், இது எதிர்கால வணிக வளர்ச்சிக்கான சிறந்த முகவரியாகக் கருதப்படுகிறது.
இந்த புதிய வணிக மையத்தின் அறிமுகம் மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து சான்பிரிக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஸ்டானி ஜோசப் பேசுகையில்: வாக்குறுதி அளிப்பது மட்டுமல்ல, அதைச் துல்லியமாகச் செயல்படுத்திக் காட்டுவதுதான் சான்பிரிக்ஸ் நிறுவனத்தின் தனித்துவமான அடையாளம் ஆகும். இதன் மூலம் தரத்தில் எந்தவித சமரசமும் இல்லாமல் திட்டங்களை எங்களால் வெற்றிகரமாக நிறைவேற்ற முடிகிறது. இதுவரை நாங்கள் மேற்கொண்ட அனைத்து திட்டங்களையும் தரத்திலும், சொன்ன காலக்கெடுவிலும் சிறப்பாக நிறைவேற்றியுள்ளோம்.
தொடர்ந்து நிறுவனத்தின் எதிர்கால இலக்குகள் குறித்துப் பேசிய சான்பிரிக்ஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி சௌமியா ராஜேஷ் ,கூறுகையில்: வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை,எங்களின் தொழில்நுட்ப திறன்,உலகத்தரம் வாய்ந்த கட்டுமானம் மற்றும் காலத்திற்கேற்ற ஒப்படைப்பு ஆகியவற்றின் மூலம் கோவையின் உட்கட்டமைப்பு மற்றும் வணிக வளர்ச்சியில் சான்பிரிக்ஸ் தொடர்ந்து முதன்மையாகப் பங்களித்து வருகிறது.
இந்நிகழ்வில் சான்பிரிக்ஸ் நிறுவனத்தின் திட்ட மேலாளர் டேவிட் கிறிஸ்டோபர், அலுவலக மேலாண் இயக்குநர் வைஷ்ணவி திருப்பதி மற்றும் நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள், ஊழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



