தஞ்சாவூர், மே 20 –
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சாவூரில் இளைஞர்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தஞ்சாவூர் தலைமை தபால் அலுவலகம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அகில இந்திய மாணவர் பெருமன்றம் ஆகியவை சார்பில் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வுவை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அருளரசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அர்ஜுனன் முன்னிலை வகித்தார். அகில இந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பாரதி, மாவட்ட தலைவர் காரல் மார்க்ஸ், இந்திய மாணவர் சங்க மாநில குழு உறுப்பினர் தர்ஷினி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகர தலைவர் நாகராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது மட்டுமன்றி, இட ஒதுக்கீடும் கேள்விக்குறியாக உள்ளது. ஏழை எளிய மாணவர்களி ன் மருத்துவ கனவை சிதைப்பதுடன் தொடர் தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். பிளஸ் டூ வகுப்பு மதிப் பெண் அடிப்படையில் மருத்துவர் படிப்பில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். தேசிய தேர்வு முகமை கலைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன



