கொல்லங்கோடு, செப். 20 –
கொல்லங்கோடு அருகே மஞ்சத்தோப்பு பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் புதருக்குள் இருந்து நேற்று இரவு பெண் ஒருவரின் முனகல் சத்தம் கேட்டது. இதை அந்தப் பகுதியில் உள்ள நபர் கொல்லங்கோடு போலீசருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு சென்று பார்த்த போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அலங்கோலமாக நிர்வாணமாக மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து பெண் போலீசார் வரவழைக்கப்பட்டு அந்தப் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அவர் சிலுவைபுரம் பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் மனைவி ஆஷா என்று தெரிய வந்துள்ளது. இவரை யாராவது கடத்தி வந்து பாலியல் தொல்லை கொடுத்தார்களா? என்பது பெண்ணுக்கு சுய நினைவு திரும்பிய பிறகு உண்மை தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
இதற்கிடையில் சம்பவ தினம் இரவு 3 வாலிபர்கள் அந்த பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்ததாக போலீசானிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். அவர்கள் பைக்கில் சென்றதையும் பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதன் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. மேலும் அந்தப் பகுதியில் உள்ள சி சி டிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.


