By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா

Last updated: May 25, 2026 5:49 pm
May 25, 2026
36 Views
Share
SHARE

கோவை, மே 25 –

கோவை, கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியின் 19வது பட்டமளிப்பு கல்லூரி வளாகத்தில் உள்ள முனைவர் மாரப்ப கவுண்டர் ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் திருவாரூர், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் எம்.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பட்டதாரிகளுக்குப் பட்டங்களை வழங்கிப் பட்டமளிப்பு விழா சிறப்புரையாற்றினார்.

பின்பு அவர் கூறுகையில்: ஒவ்வொருவரும் உயர்கல்வி பயின்று பட்டம் பெறுவதற்கு முதல் காரணம் அவர்களது பெற்றோர்கள் என்றும் பெற்றோர்கள் தங்களது உறக்கம், மகிழ்ச்சி ஆகியவற்றைத் தியாகம் செய்து தங்களது பிள்ளைகளை முன்னேறச் செய்கின்றனர் என்றும் அத்தகைய பெற்றோர்களைத் தெய்வமாகக் கருதி வணங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

உயர்கல்வி என்பது அதனைப் படித்து முடித்தவரின் குடும்பத்தைப் பாதுகாப்பதற்கானது மட்டுமல்ல அது சமுதாயத்தைக் காப்பதற்கானது என்பதைப் பட்டதாரிகள் உணரவேண்டும் என்றார். உயர்கல்வியில் செய்யப்படும் ஆராய்ச்சியின் விளைவுகளான புதிய கண்டுபிடிப்புகள் நாட்டின் கடைக்கோடியில் உள்ள குடிமகன் வரை சென்று சேரும்போதுதான் அந்த உயர்கல்வி முழுமையான பயனைத் தருவதாக அமையும் என்றும் கடின உழைப்பு, தனித்திறன், ஒழுக்கம்,நேர்மை ஆகிய நற்பண்புகள் தான் ஒருவரை முன்னேற்றும் என்றும் பட்டதாரிகளிடம் குறிப்பிட்டார்.

முன்னதாகக் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ. வாசுகி தலைமையுரையாற்றினார். பின்பு அவர் கூறுகையில்: வளமான நாடு என்பது அங்குள்ள இயற்கை வளம் மற்றும் செல்வ வளம் ஆகியவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. அங்கு வாழும் மக்களின் அறிவு, பண்பாடு ஆகியவையும் வளமானதாக இருந்தால் தான் அது வளம் பொருந்திய நாடு என்றும் உண்மையான வெற்றி என்பது உயர்கல்வி கற்று ஊதியம் குவிப்பது மட்டுமல்ல சிறந்து உருவாக்குவது என்றும் குறிப்பிட்டார்.

பட்டமளிப்பு விழா நிகழ்வைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் வே. சங்கீதா தொடங்கி வைத்தார். இப்பட்டமளிப்பு விழாவில் இளநிலை மற்றும் முதுநிலைத் தேர்வுகளில் தரவரிசைப் பெற்ற பட்டதாரிகளுக்கு முதலில் பட்டங்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இளநிலை பட்டதாரிகள் 1068 பேருக்கும் முதுநிலை பட்டதாரிகள் 235 பேருக்கும் முதுநிலை பட்டயப் படிப்பை நிறைவு செய்த 29 பேருக்கும் சிறப்பு விருந்தினர் பட்டங்களை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்று சாதனை
சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோவிலில் காளிபராசக்திக்கு ஆடிப்பூர வளைகாப்பு விழா.
பாலக்கோடு அருகே அரசு நகர பேருந்து மீது புளிமரம் சாய்ந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்
TAMCO மூலம் சிறுபான்மையினர் பல்வேறு வகை கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நேசமணி நகர் காவல் நிலையம், மற்றும் காவலர் குடியிருப்பில் எஸ் பி ஆய்வு

December 24, 2024
80 Views
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட விளக்கு பூஜை வழிபாடு
பெருமாநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20.03.2025
தஞ்சாவூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account