By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி போலீஸ்காரரிடம் மாற்று சிறுநீரகம் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி: நர்ஸ் உட்பட 3 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி போலீஸ்காரரிடம் மாற்று சிறுநீரகம் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி: நர்ஸ் உட்பட 3 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரி போலீஸ்காரரிடம் மாற்று சிறுநீரகம் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி: நர்ஸ் உட்பட 3 பேர் மீது வழக்கு

Last updated: July 27, 2026 5:30 pm
July 27, 2026
31 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 27 –

நாகர்கோவிலில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட போலீஸ்காரருக்கு மாற்று சிறுநீரகம் பெற்று தருவதாக ரூ.12 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக நர்ஸ் உட்பட 3 பேரிடம் விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் வட்டவளை பகுதியைச் சேர்ந்த 29 வயதான போலீஸ்காரர் தற்போது மணிமுத்தாறு பட்டாலியன் பிரிவில் பணியில் இருக்கிறார். இவருக்கு சிறுநீரக பிரச்சனை இருந்து வந்தது. மருத்துவ பரிசோதனையில் மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்காக முயற்சியில் போலீஸ்காரர் மற்றும் அவரது குடும்பத்தினர் இறங்கி இருந்தனர்.

இந்த நிலையில் நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றும் பாக்கியபாய் என்பவர் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை சேர்ந்த ரீகன் என்பவரின் தொடர்பு கிடைத்தது. அப்போது ரீகன் மாற்று சிறுநீரகம் பெற உதவி செய்வதாக உறுதி கூறி போலீஸ்காரிடமிருந்து ரூ. 12 லட்சம் பெற்றுள்ளார். பணத்தைப் பெற்று பல மாதங்கள் ஆன பின்னரும் இன்னும் சிறுநீரகம் பெற்றுக் கொடுக்கவில்லை. போலீஸ்காரர் உடல் நிலையும் பாதிப்புக்கு உள்ளாகி வந்துள்ளது.

இது குறித்து கேட்டபோது முறையான பதில் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக தற்போது பாதிக்கப்பட்ட போலீஸ்காரர் கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ரீகன் மற்றும் மதுரை பெருமாள் பகுதியை சேர்ந்த முகமது பாசில், நாகர்கோவிலை சேர்ந்த பாக்கிய பாய் ஆகிய 3 பேர் மீது கோட்டாறு போலீசார் மோசடி உள்ள பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த கோட்டாறு இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை அடுத்த 3 பேரையும் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்துள்ளனர். ஆனால் அவர்கள் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. விசாரணை நடத்தினால் தான் இந்த சம்பவத்தின் பின்னணி தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

இளைஞர் தூக்கிட்டு தற்கொலை; சமூக வலைதளங்களில் பொய் தகவல் – எஸ் பி விளக்கம்
நாகர்கோவிலில் சூரிய ஒளி கதிர்கள் நேரடியாக படும் அளவில் திறந்த வாகனங்களில் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
தஞ்சாவூரில் முன்னாள் படை வீரர்களுக்கு அண்ணா சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்: கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
முன் அறிவிப்பு இன்றி தோவாளை கால்வாய் தண்ணீரை
பென்னாகரம் அருகே வனத்துறையினரின் அலட்சியத்தால் யானை தாக்கி விவசாயி பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

திட்டுவிளை சந்திப்பு முதல் அருநல்லூர் வரை போதை பழக்கத்திற்கு எதிரான மாராத்தான் தொடர் ஓட்டம்

September 6, 2025
67 Views
சட்டசபை தேர்தலில் வாக்களிக்க பார்வை குறைபாடுடைய வாக்காளர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
பல்லடம் வட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா !!!
உமன்ஸ் லீக் பவுண்டேஷன் நிறுவனர் திவ்யா சுவப்ணராஜ்க்கு INDIAN AWARDS நிகழ்ச்சியில் சிறந்த சமூக சேவை விருது
பாலக்கோடு அருகே போலீசுக்கு தெரியாமல் நிலத்தகராறில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முயற்சி: பிரேதத்தை கைப்பற்றிய காவல்துறையினாரல் பரபரப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account