கிருஷ்ணகிரி, ஜூன் 12 –
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஓசூர், தளி, அஞ்செட்டி, டேன்கனிக்கோட்டை, சூளகிரி, பர்கூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி ஆகிய வட்டாச்சியார் அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் உத்தரவின்படி ஜமாபந்தி துவங்கியது. கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் துவங்கிய ஜமாபந்தி நிகழ்ச்சியில் வேப்பனப்பள்ளி உள்வட்டத்திற்குட்பட்ட 28 கிராமங்களுக்கான ஜமாபந்தி மாவட்ட தனித் துறை ஆட்சியர் அபிநயா தலைமையில் நடைபெற்றது.
முதல் நாளான இன்று வேப்பனப்பள்ளி உள்வட்டத்திற்குட்பட்ட பதிமடுகு, கிருஷ்ணப்பன் நாய்க்கன் போடூர், இனாம்குட்டப்பள்ளி, தளிப்பள்ளி, தடதாரை, பொம்மரசனப்பள்ளி, தீர்த்தம், நாடுவனப்பள்ளி, தாசிரிப்பள்ளி, அளேகுந்தாணி, ஹலேகிருஷ்ணாபுரம், நேரலகிரி, எட்டிப்பள்ளி, கங்கோஜிகொத்தூர், தேவர்குந்தாணி, ராகிமாகனப்பள்ளி, தங்காடிகுப்பம், மணவார்னபள்ளி, சிங்கிரிப்பள்ளி, கொல்லப்பள்ளி, சீரனப்பள்ளி, எப்ரி, கச்சிருகானப்பள்ளி ஆகிய 28 வருவாய் கிராமங்களுக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா, பட்டா ரத்து, ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு, புதிய குடும்ப அட்டை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு மனுக்களை மாவட் தனித்துறை ஆட்சியர் அபிநயா பெற்றுக்கொண்டு தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது வட்டாச்சியர் ரமேஷ், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.



