கிருஷ்ணகிரி, ஏப். 27 –
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 41 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் மல்கோவா, மீத்தர், பங்கனப்பள்ளி, காதர், பெங்களூர், நிலம் என பல்வேறு வகையான சுவை மிகுந்த மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 2 லட்சத்து 52 ஆயிரத்து 436 மெட்ரிக் டன் மா உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடு மட்டுமின்றி உள் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதன் மூலமாக மா விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பயன்பெற்று வந்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவநிலை மாற்றம் மற்றும் பூச்சி தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் மா மகசூல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் தொடர் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் வேப்பனஹள்ளி, தடத்தரை, மாதேப்பள்ளி என மாவட்டம் முழுவதும் போதிய மழை பெய்ததால் மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அறுவடை செய்ய வேண்டிய நிலையில் மாங்காய்கள் சிறிய அளவில் காணப்படுவதால் வியாபாரிகள் யாரும் வராததால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வேப்பனஹள்ளி பகுதியை சேர்ந்த மா விவசாயி ஷபியுல்லா கூறுகையில்: கடந்த
ஆண்டை போலவே இந்த ஆண்டும் மா விளாச்சல் அதிகமாக காணப்பட்டது. ஆனால் காய் பிடிக்கும் பருவத்தில் மழை குறைந்துப் போனதால் மகசூல் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் வியாபாரிகள் யாரும் மாங்காய்களை கொள்முதல் செய்ய முன் வராததால் வங்கிகளில் லட்சக்கணக்கில் கடன் வாங்கி செலவு செய்தும் மழை ஏமாற்றியதால் மாங்காய்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் தமிழக அரசு மழை இன்றி பதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்கி வங்கிகளில் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய முன் வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.



