நாகர்கோவில், அக். 9 –
நாகர்கோவில், வெட்டூர்ணிமடம் திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் உள்ள பொதுமக்கள் நடைபாதையில் விபத்துகள் ஏற்படும் வகையில் பெரிய பள்ளம் இருப்பதால் பாதசாரிகள் நடந்து செல்லும் போது தவறி விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டும் முன் சரி செய்ய வெளியான செய்தியை அறிந்த காவல்துறை உடனே சென்று அந்த பள்ளம் இருந்த இடத்தில் தடுப்புகள் வைத்து விபத்துகள் நடக்காமல் பார்த்துக் கொண்டனர். இது மட்டுமல்லாமல் சாலையில் விபத்து ஏற்படும் வகையில் பள்ளங்கள் இருந்தாலும் மண் நிரப்பி பொதுமக்கள் பாதுகாப்பில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி உறுப்பினர்கள் இது பற்றி அக்கறை இல்லாமல் இந்த இடத்தை கடந்து செல்கின்றனர். கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு மேல் ஆகியும் இவ்விடம் சரி செய்யப்படவில்லை பொதுமக்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகளும் இதை கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.



