மார்த்தாண்டம், அக். 10 –
உண்ணாமலை கடை பத்திரகாளி அம்மன் கோவில் சித்தர் பீடம் சிவலிங்கம் சிலை உடைக்கப்பட்டது போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.
மார்த்தாண்டம் அருகே உண்ணாமலை கடை முடியாம்பாறை ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் 51- வது வருடாந்திர நவராத்திரி திருவிழா கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்றது. இதில் வெள்ளிமலை சுவாமிஜி சைதானந்தா ஜி மஹராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரியமான இந்த கோவிலில் தினசரி பூஜைகளும், முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் அமாவாசை விஜயதசமி ஆகிய தினங்களில் சிறப்பு பூஜைகளும் வழிபாடு நடைபெற்று வருகிறது.
இந்தக் கோவிலின் முன் பகுதியில் இருந்த சிவலிங்கத்துடன் கூடிய சித்தர் பீடத்தை நேற்று நள்ளிரவு உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் உடைத்து எறிந்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஆலய தலைவர் பால்ராஜ் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



