களியக்காவிளை, ஜுன் 5 –
களியக்காவிளை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை படந்தாலுமூடு, ஆலுமூடு சந்திப்பில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக கேரளா எல்லை குமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரி வரையிலான ரோட்டில் எப்பேதும் வாகனங்கள் சென்ற வண்ணம் உள்ளது. வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்த ரோட்டில் செல்ல வேண்டும். இவ்வாறு முக்கியமாக விளங்கும் ரோட்டில் ஆங்காங்கே குண்டும் குழியும் ஏற்பட்டுள்ளது.
இதில் படந்தாலுமூடு, ஆலுமூடு சந்திப்பில் மிகவும் ஆழமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த ரோட்டில் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உள்ளனர். ஆகவே இந்த ரோட்டினை தார் அமைத்து சீரமைத்திட வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.



