களியக்காவிளை, ஏப். 27 –
களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியை சார்ந்தவர் அலேக்கேஸ் மகன் மரிய பெனடிக்டர். இவர் ஆடிட்டராக பணி புரிந்து வருகிறார். கடந்த ஏப்ரல் 4ம் தேதி ஈஸ்டர் பண்டிகையையொட்டி இவர் குடும்பத்தாருடன் இரவு சர்ச்சுக்கு சென்றுள்ளனர். அப்போது திருடன் விட்டின் கதவினை உடைத்து வீட்டில் இருந்த நகைகளை திருடிச் சென்றுள்ளார். இது குறித்து மரிய பெனடிக்டர் களியக்காவிளை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்த திருடனை தேடி வர்தனர்.
இந்நிலையில் கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை தாலுகா பகுதியை சார்ந்த சுனில்குமார் மகன் ஆல்பி ராஜ் (33) என்பவரை களியக்காவிளை எஸ். ஜ மகேந்த் தலைமையிலான போலீசார் கேரளா சென்று பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடம் இருந்த 20 சரவன் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



