நாகர்கோவில் மார்ச் 23
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் மண்டலம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 17 புதிய பேருந்து சேவைகள் நேற்று தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, கொடியசைத்து சேவையை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் சட்டமன்ற உறுப்பினர்கள் த. மனோ தங்கராஜ் , செ. ராஜேஷ்குமார் ஜே. ஜி. பிரின்ஸ், முனைவர் தாரகை கத்பர்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 52 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் 17 பேருந்துகள் விருதுநகர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு ₹1,031 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 3,000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யவுள்ளது.
பெரிய பேருந்துகள் செல்ல முடியாத பகுதிகளுக்கு புதிய மினி பேருந்து சேவைகள் விரைவில் தொடங்கப்படும்.
அரசு தரமான, நம்பகத்தன்மை கொண்ட போக்குவரத்து சேவைகளை அனைத்து கிராமங்களுக்கும் விரைவில் கொண்டு செல்லும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.



