கன்னியாகுமரி, நவ. 10 –
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வார விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இந்த நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை வாரம் முறையின் முதல் நாளில் வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. இதனால் அன்று சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் காலை முதலே சூரிய உதயத்தை காண ஏராளம் மக்கள் குவிந்தனர். ஆனால் நேற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து திருவேணி சங்கமத்தில் காத்திருந்தனர். ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் சூரிய உதயம் தெரியவில்லை. இதனால் அங்கு காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பயணிகள் கடலில் புனித நீராடியதுடன் பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து மேலும் பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்தனர்.



