கன்னியாகுமரி, ஆக. 3 –
குழித்துறை ரோட்டரி சங்கம், கன்னியாகுமரி ரோட்டரி சங்கம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, கயல் ரைடர்ஸ் ஃபேமிலி, ஷெர்பாஸ் ரைடர்ஸ் கிளப் ஆகியன இணைந்து நடத்தும் கன்னியாகுமரி முதல் லடாக் வரையிலான இரு சக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரப் பயணமானது கன்னியாகுமரி சீறோ பாயின்ட் இடத்தில் இருந்து தொடங்கியது.
ஒரே நாடு, ஒரே நம்பிக்கை, ஒரே பயணம் என்ற கருப்பொருளுடன் நடந்த இந்த நிகழ்வின் தொடக்க நிகழ்ச்சிக்கு அகில இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசிய தலைவரும், முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநருமான டாக்டர் விஜயகுமார் தலைமை தாங்கினார். திட்டத் தலைவர் சுனில் குமார் அனைவரையும் வரவேற்றார்.
முன்னாள் துணை ஆளுநர்கள் டாக்டர் ஜேம்ஸ் வில்சன், டாக்டர் காவேரிக் கண்ணன், ராபர்ட்சன், தற்போதைய துணை ஆளுநர் ரகுபதி, கன்னியாகுமரி ரோட்டரி சங்கத் தலைவர் பிரின்ஸ் ஆரோக்கிய ஸ்டெவி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கன்னியாகுமரி மாவட்ட சேர்மன் டாக்டர் குமாரதாஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்.
குழித்துறை ரோட்டரி சங்க பங்கேற்பாளர்கள் பென்சிகர், ரெகு முதலான பதினொரு நபர்களுடன் பிற மாநிலத்தவருமாக ஐம்பத்திருவர் லடாக் வரை பயணிக்கிறார்கள். குழித்துறை ரோட்டரி சங்கத் தலைவர் ஸ்ரீ நாகேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார். சங்க முன்னாள் தலைவர் சஜீவ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். குழித்துறை ரோட்டரி சங்கச் செயலாளர் கிருஷ்ணதாஸ், முன்னாள் செயலாளர் ரமேஷ், கன்னியாகுமரி ரோட்டரி சங்கச் செயலாளர் ஜீசஸ் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சித் தலைவர் கொடியசைத்து பயணத்தை தொடக்கி வைத்தார்.



