By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரர்களுக்கு ஒரு நீதியா என பொதுமக்கள் ஆவேசம்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரர்களுக்கு ஒரு நீதியா என பொதுமக்கள் ஆவேசம்!!
தமிழ்நாடுதிருப்பூர்

ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரர்களுக்கு ஒரு நீதியா என பொதுமக்கள் ஆவேசம்!!

Last updated: June 12, 2026 5:37 pm
June 12, 2026
7 Views
Share
SHARE

திருப்பூர், ஜூன் 12 –

திருப்பூர் மாநகராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட அங்கேரிபாளையம், திருவள்ளுவர் நகர், முத்துநகர், ஆத்து பாளையம் உள்ளிட்ட இடங்களில் செல்லும் நல்லாறு வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 147 வீடுகளை இடித்து அகற்றுவதற்கு வருகை தந்த பவானிசாகர் அணைக்கோட்டம் பொதுப்பணித்துறை நீர்வளத் துறை அதிகாரிகள், போலீசார் உடன் வந்தபோது பொதுமக்கள் கடும் எதிர்ப்பு. 2 வீடுகள் இடித்து அகற்றம்.

நல்லாற்றை பல அடி தூரத்திற்கு ஆக்கிரமிப்பு செய்து காம்பவுண்ட் சுவர் கட்டி பயன்படுத்தி வரும் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் ஆக்கிரமிப்பை அகற்றிய விட்டு பின்னர் எங்களது வீடுகளை இடியுங்கள் எனக் கூறி ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரர்களுக்கு ஒரு நீதியா என பொதுமக்கள் ஆவேசம் -பரபரப்பு.

திருப்பூர் மாநகராட்சி உட்பட்ட 10 வது, 11-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட அங்கேரிபாளையம், திருவள்ளுவர் நகர், முத்து நகர், ஆத்துப்பாளையம், சத்யா காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்கள் உள்ளன. இதில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டம் அன்னூரில் துவங்கி கருவலூர் அவிநாசி திருமுருகன் பூண்டி வழியாக அங்கேரிபாளையம், பிச்சம்பாளையம், போயம்பாளையம் மற்றும் வெங்கமேடு ஆகிய பகுதிகளில் சென்று நஞ்சராயன் குளத்தை நிரப்பி இறுதியாக உபரி நீர் நொய்யல் ஆற்றில் கலக்கிறது.

16 கிலோமீட்டர் தூரம் நீளமுள்ள நல்லாறு ஒரு காலத்தில் நன்னீராகவும் இருந்துள்ளது. ஆற்றின் அருகே குடியிருப்புகள், தொழிற்சாலைகள் அமைந்ததால் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாக்கடை நீராக மாறிவிட்டது. நல்லா இரு பல இடங்களில் ஆக்கிரமிப்புகளால் ஆறு 90 சதவீதம் சுருங்கி குறுகலாக காணப்படுகிறது. ஏறத்தாழ 150 அடி முதல் 250 அடி அகலம் வரை சென்று கொண்டிருந்த நல்லாறு தற்போது சாக்கடை ஆறாக ஆக்கிரமிப்புகளால் குறுகி செல்கிறது. பல இடங்களில் குழாய்களை பதித்து தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் நேரடியாக நல்ல ஆற்றில் கலக்கிறது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் காலம் கடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு நல்லாற்றின் ஓடைப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 147 வீடுகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என நோட்டீஸ் வழங்கினர். தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த வீட்டில் இருப்பவர்களுக்கு மாற்றாக அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் தருவதாக கூறினர். ஆனால் அதில் வசிக்கக் கூடிய மக்கள் தங்களுக்கு வீடு வேண்டாம் இடத்தை தாருங்கள் என கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டு செட்டிபாளையம் பகுதியில் 39 நபர்களுக்கு தலா 2 லட்சம் பணத்தை செலுத்தி அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அதில் 12 பேர் மட்டும் பணத்தை செலுத்தினர். ஆனால் அவர்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்பு செல்லாமல் ஓடை புறம்போக்கு பகுதியில் உள்ள வீட்டிலேயே இருந்து வந்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் போதிய அடிப்படை வசதிகள் கூட இல்லை என குற்றச்சாட்டு தெரிவித்து இங்கேயே இருந்துள்ளனர்.

இதனிடையே பவானிசாகர் அடைக்கோட்டத்திற்கு பணியாற்றும் பொதுப்பினை துறைக்கு உட்பட்ட நீர்வளத் துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் வகையில் இன்று நல்லற்றின் ஓடையில் புறம்போக்கில் ஆக்கிரமித்து இருக்கக்கூடிய வீடுகளை அகற்றுவதற்காக போலீசார் உதவியுடன் வந்தபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 45 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசித்து வருவதாகவும் தங்களுக்கு வீடு வேண்டாம் மாற்றாக இடம் வழங்குங்கள் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

நல்லாற்றின் ஒருபுறத்தில் வீடுகள் கட்டி மக்கள் ஆக்கிரமித்துள்ளனர். மறுபுறத்தில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் ஒன்று காம்பவுண்ட் சுவரை நல்லாற்றை ஆக்கிரமித்து கட்டி உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். எங்களது வீடுகளில் இடிப்பதற்கு முன்பாக மற்றொரு கடையில் உள்ள பின்னலாடை நிறுவனத்தின் காம்பவுண்டு சுவர் ஆக்கிரமிப்பு அகற்றிய பின்னர் எங்களது வீடுகளை இடியுங்கள் எனக் கூறி ஏழைக்கு ஒரு நீதியும் பணக்காரர்களுக்கு ஒரு நீதியா என பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர். இதனால் நல்லாற்றின் கரை ஓரம் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த நீர்வளத்துறை அதிகாரிகள், போலீசார் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நல்லாற்றின் இரு கரைகளும் பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் ஆற்றின் அகலம் மிகவும் சுருங்கிப்போயுள்ளது. நல்லாற்றின் குறுக்கே உள்ள ஆக்கிரமிப்புகளைத் துல்லியமாகக் கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்காக, தமிழக நீர்வளத்துறை (WRD) உலகளாவிய இயற்கை நிதியத்துடன் (WWF-India) இணைந்து ட்ரோன் (Drone) மூலம் நவீன ஆய்வு நடத்தத் திட்டமிட்டு அதுவும் கிடப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. நீர்வளத் துறை அதிகாரிகள் ஆற்றின் இரு புறங்களிலும் உரிய ஆய்வை நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

உயர் நீதிமன்றம் தீர்ப்பை அவமதித்த தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தின் போது கைது
தருமபுரி உணவு பொருள் நுகர்வோர் பாதுகாப்பு
கன்னியாகுமரி அருகே பைக் மீது மோதி நிற்காமல் சென்ற கேரளா கார்: வாலிபர் படுகாயம்
தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே இருந்து அகழியில் கருவேல மரங்கள், புதர்கள் அகற்றும் பணி: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்
ஆரல்வாய்மொழி தேவசகாயம் திருத்தலத்திற்கு வாடிகன் பிரதிநிதி வருகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா

March 7, 2026
27 Views
நாஞ்சில் கத்தோலிக்க கலை, அறிவியல் கல்லூரியில் சமூக பணி வழிகாட்டுதல் பயிற்சி
திடீர் சோதனை ஒரு லட்சத்தி 11ஆயிரம் பறிமுதல்
புளியங்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account