நாகர்கோவில், ஆகஸ்ட் 05 –
முதலமைச்சர் விஜய் எம்.ஜி.ஆர் பாணியை பின்பற்றி வருகிறார். அவரையும், ஆட்சியையும் அவதூறாக விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறார்கள். அந்த வகையில் தான் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டு உள்ளார் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முத்துக்குமார் கூறியதாவது: அநாகரிக பேச்சால் தான் இதற்கு முன்பு முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். எதிர் கட்சி தலைவர் உதயநிதி மீது தற்போது கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது. ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விட மாட்டேன் என்கிற எம்ஜிஆரின் பாடல் வரிக்கேற்ப விஜய் ஆட்சி செய்ய விரும்புகிறார் போலும்.
வருகிற சட்டமன்ற கூட்டத் தொடர்களில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதையும் முன்கூட்டியே உணர்ந்தது போல் நடவடிக்கைகள் இருக்கிறது. எனவே எதிர் கட்சிகள் ஆக்கபூர்வமாக சட்டமன்றத்தில் இயங்குவது ஆரோக்கியமான அரசியலுக்கு வழி வகுக்கும். இவ்வாறு முத்துக்குமார் கூறியுள்ளார்.



