நாகர்கோவில் கிழக்குப் பகுதி இளைஞர் அணி அமைப்பாளராக கோட்டார் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சி.அஜித் நியமனம்.
துணை முதல்வர் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று புதிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். அதில் நாகர்கோவில் கிழக்கு பகுதி இளைஞரணி அமைப்பாளராக கழக பணியாற்றிட தேர்வு செய்யப்பட்டுள்ள அஜித் மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது மட்டுமல்லாமல் கட்சி வளர்ச்சியிலும் அதிகம் கவனம் செலுத்த கூடியவர். இளைஞரான இவரின் துடிப்பு மிக்க செயலால் கட்சித் தலைமை நாகர்கோவில் கிழக்கு பகுதி இளைஞரணி செயலாளராக இவரை நியமனம் செய்துள்ளது .



