சென்னை, மார்ச் 23 –
ஜல்லிக்கட்டு மக்கள் கட்சி சார்பில் சென்னை மாவட்ட கலந்தாய்வு கூட்டம் கட்சியின் தலைவர் ராமராஜன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த கட்சியின் தலைவர் ராமராஜன் கூறியதாவது:
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியும் சினிமா தலைமை தவிர்த்து மக்கள் சக்தி வாய்ந்த ஒரு அரசியல் களத்தை முன்னெடுக்க வேண்டி, நடைபெற இருக்கின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் ஜல்லிக்கட்டு மக்கள் கட்சி 234 தொகுதிகளிலும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாகவும் அதே நேரத்தில் திராவிட முன்னேற்ற கழகம் ஆதரவு கேட்டிருக்கும் நிலையில் தங்களுடைய கட்சி சார்பில் இரண்டு தொகுதிகள் கேட்டுள்ளதாகவும், தொகுதி உடன்பாடு ஏற்படவில்லையெனில் தனித்து போட்டியிடும் என்று தெரிவித்தார்.
எங்கள் கட்சியினுடைய முக்கிய நோக்கம் அனைவருக்கும் கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்புகளுக்கு முன்னுரிமை, தூய்மையான அரசியலை முன்னெடுப்பதே ஜல்லிக்கட்டு மக்கள் கட்சியின் முக்கிய நோக்கம் என தெரிவித்தார். மேலும் இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாநில மாவட்ட மகளிர் அணி தலைவி, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



