நாகர்கோவில், ஜன. 29 –
நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ் தனியார் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமை வகித்து பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 12 அரசு கல்லூரிகள் மற்றும் 17 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் 2,182 மாணவர்களுக்கு முதற்கட்டமாக அரசின் மடிக்கணினிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டத்திற்குட்பட்ட லாரன்ஸ் டெக்னிக்கல் டிரெயினிங் சென்டர் 25, பொன் ஜெஸ்லி கல்லூரி 263, ஜெயசேகரன் காலேஜ் ஆப் நர்சிங்கோம் 47, ஸ்ரீ வைகுண்டர் பாலிடெக்னிக் கல்லுரி 28, ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லுரி 33, சி.எஸ்.ஐ மோட்டார் மெக்கானிக் டிரெயினிங் இன்ஸ்டிடியூட் 7, கிராஸ் காலேஜ் ஆப் நர்சிங் 32, சால்வேஷன் ஆர்மி காலேஜ் ஆப் நர்சிங் 47, ஜெயமாதா பொறியியல் கல்லூரி 104 என மொத்தம் 9 தனியார் கல்லூரிகளில் பயிலும் 586 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் மேயர் மகேஷ், பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் நடராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் செல்வகுமார், பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரி துணை முதல்வர், பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.



