சென்னை, ஜூலை 1 –
இந்தியாவில் உள்ள 24 மாநிலங்களைச் சேர்ந்த 4,527 இளைஞர்களிடம் ஒரு தேசிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, 88.5 சதவிகித இந்திய இளைஞர்கள், தங்கள் மனநல ஆரோக்கியத்திற்கு நட்பு மிகவும் அவசியமானது என்று கருதுகின்றனர். அதே சமயம், நண்பர்கள் புடை சூழ இருந்தாலும், 76.8 சதவிகித இளைஞர்கள் தனிமையை அனுபவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த இளைஞர்களில் 56.20 சதவிகிதத்தினர் நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள், 43.8 சதவிகிதத்தினர் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மேலும், இதில், 54.8 சதவிகிதத்தினர் பெண்கள், 45.1 சதவிகிதத்தினர் ஆண்கள் ஆவர்.
இந்த விவரங்கள், அருட்தந்தை ஜான் அலெக்சாண்டர் எஸ்.டி.பி. அவர்களின் ”பிரெண்ட்ஷிப் ஆஸ் வெல்-பீயிங் இன் த ஏ ,ஐ ஈரா ” நூலில் இடம்பெற்றுள்ளது. இந்த நூல் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகம், முன்னெப்போதும் இல்லாத உறவுச் சிக்கல்களான டிஜிட்டல் சுமை, இடப்பெயர்ச்சி, சமூக சிக்கல்கள் கல்விச் சுமை, ஆகிய சிக்கல்களை வலிமையோடும், அற உணர்வோடும் எதிர்கொண்டு வரும் இளைய தலைமுறையினரைப் பற்றிப் பேசுகிறது. இந்த உண்மை இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
இந்த ஆய்வு முடிவுகளில் வேறு சில விவரங்களும் தெரிய வந்துள்ளன. குறிப்பாக, 58.6 சதவிகித இளைஞர்களுக்கு, ஆழ்ந்த உணர்வு ரீதியான பிணைப்பு இல்லை, 54.8 சதவிகிதத்தினர் தாங்கள் தவறாக புரிந்துகொள்ளப்படுகிறோம் என்று கருதுகின்றனர். மேலும், 50.3 சதவிகிதத்தினர், தங்களுடைய உணர்வு ரீதியான தேவைகள் நிறைவேற்றப்படுவதில்லை என்றும் கருதுகின்றனர்.
இந்த நூலின் ஆசிரியரான அருட்தந்தை ஜான் அலெக்ஸாண்டர், எஸ்.டி.பி., டான் பாஸ்கோ சபை துறைவியாவார். அவர், பெல்ஜியத்தில் உள்ள கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னுடன் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இணைந்து பணியாற்றியவர். தற்போது அவர், சென்னை மறை மாவட்டத்தின் துணை மாகாண அதிபராக பணியாற்றி வருகிறார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் அருட்தந்தை முனவர் ஜான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பெல்ஜியம் லூவென் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர். ஆண்டூன் வான்டெவெல்டே, ரோம் நகரத்துக்கான தெற்காசியாவின் பொது கவுன்சிலர் அருட்தந்தை பிஜு மைக்கேல், மற்றும் இந்து’ குழுமத்தின் இயக்குநர் என்.ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


