தருமபுரி, ஜூலை 06 –
தருமபுரி மாவட்டம் அரூரில் கிரிடிட் ஆக்சஸ் இந்தியா பவுண்டேஷன் நிறுவனத்தின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டிஜிட்டல் பண மோசடிகளை எப்படி தடுப்பது, குழு மற்றும் தனி நபர் கடன் ஒழுங்குபடுத்தும் பழக்கம், பொறுப்புடன் கடன் எடுப்பது, கடன் தேவைக்குத்தான் வாங்க வேண்டும் ஆடம்பரத்திற்கு வாங்க வேண்டாம் கடனை பெற்றவர்கள் வீட்டு தேவைக்கு பயன்படுத்துங்கள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தினர்.
இதில் மண்டல மேலாளர் R.மணி, பிராந்திய மேலாளர் பசுவராஜ், YK பகுதி மேலாளர் அருள்மணி, வட்டாச்சியர் வள்ளி, துணை வட்டாட்சியர் எழில் மொழி, வருவாய் ஆய்வாளர் சத்திய பிரியா,
சிறப்பு காவல் ஆய்வாளர் ரோஜா, கிளை மேலாளர்கள் ராஜேஷ், கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



