வேலூர், ஆகஸ்ட் 20 –
வேலூர் மாவட்டம் கம்மவான் பேட்டை சாலை கணக்கன் தோப்பு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஶ்ரீ ஜடாமுனீஸ்வரன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக செவ்வாயன்று விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை, பூர்ணாஹூதியும் புதனன்று காலை மகா பூர்ணாஹூதி, கலசம் புறப்பாடு, மகா கும்பாபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கணக்கன் தோப்பு கிராம குலதெய்வ பக்தர்கள், ஊர் பெரியவர்கள், இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.



