வேலூர் மாவட்டம் , 2025 ஆண்டிற்கான (ICSE) 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியானது. பகவான் மஹாவீர் தயாநிகேதன் ஜெயின் பள்ளியில் 195 மாணவர்கள் தேர்வு எழுதினர். இப்பள்ளி 22 வருடம் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி விகிதத்தில் கல்விப் பணியாற்றி வருகிறது. மாணவி G.சவேதா 589 / 600 எடுத்து பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். 104 மாணவர்கள் டிஸ்டின்ஷன் (Distinction) மதிப்பெண்களையும் 65 மாணவர்கள் மெரிட் (Merit) மதிப்பெண்களையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.மேலும் 18 மாணவர்கள் 99/100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இப்பள்ளியின் தமிழ், கணினி அறிவியல், வரலாறு புவியியல் மற்றும் உயிரியல், ஆகிய பாடங்களில் 31 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும், பெற்றோர்களையும், ஆசிரியர் பெருமக்களையும் பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளியின் செயலாளர் திரு. ராஜேஷ் குமார் ஜெயின் அவர்கள் இனிப்பு வழங்கி பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.
மகாவீர் தயாநிக்கேதன் ஜெயின் பள்ளியின் செயலாளர் . ராஜேஷ் குமார் ஜெயின் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்



