சென்னை, ஜூலை 13 –
அனைவருக்கும் காப்பீடு’ என்ற தொலைநோக்கு இலக்கினை நோக்கி செல்வதற்கான விழிப்புணர்வு காமிக்ஸ் புத்தக தொடரை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) தலைவர் அஜய் சேத் வெளியிட்டார்.
இந்தியா முழுவதும் உள்ள தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஆயுள் காப்பீட்டை மிகவும் எளிதாக அணுகக்கூடிய ஒன்றாக மாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியில் இன்ஷூரன்ஸ் துறையின் முன்னோடிகள் ஒன்றினைந்துள்ளனர். அதில் ஐ.ஏ.சி.தலைவர் கமலேஷ் ராவ், எல்.ஐ.சி நிர்வாக இயக்குனர், துரைசாமி, பஞ்சாப் நேஷனல் வங்கி மெட்லைஃப் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அலுவலருமான சமீர் பன்சால், இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் நிர்வாக இயக்குனநரும் தலைமை செயல் அலுவலருமான ருஷப் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தனித்துவமான காப்பீட்டு அம்சங்களை தொழில்நுட்ப விளக்கமாகக் எடுத்துக் கூறாமல் மக்கள் தங்களோடு தொடர்புபடுத்தி எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் கதைகள் மூலம் விளக்கப்படுகின்றன. காமிக்ஸை ஒரு ஊடகமாகப் பயன்படுத்துவதற்கு, அவை அனைத்து வயதுப் பிரிவினர் மற்றும் அனைத்து பகுதிகளுக்கும் எளிதாக சென்றடையும் என்பதே காரணமாகும்.
சுப்ரியா என்கிற ஒரு இளம் ஆயுள் காப்பீட்டு ஆலோசகரின் பயணத்தை மையமாகக் கொண்ட இந்த காமிக்ஸ் தொடர், நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளை “கதை வடிவ நினைவுகளாக கொண்டுவருகிறது; இதன் மூலம் தனிநபர்கள் ஏற்கனவே எடுத்த தீர்மானங்கள் எப்படி எதிர்காலத்தில் நிதி பாதுகாப்பை எவ்வாறு ஏற்படுத்தித் தருகின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இந்த முன்முயற்சியானது, “அனைவருக்கும் காப்பீடு” என்ற பெரிய இலக்கை நோக்கிய ஒரு அர்த்தமுள்ள முன்முயற்சியைக் குறிக்கிறது.


