புதுக்கடை, ஏப். 29 –
புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு மாராயபுரம் பகுதியை சேர்ந்தவர் கங்காதரன். இவரது மகள் ஜெனிஷா (20). கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டு கல்லூரிக்கு சென்றுள்ளார். ஆனால் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காதால் அவரது தாயார் ஜெகதா என்பவர் புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்கு பதிவு செய்து, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் விசாரித்து வருகிறார்.


