திருச்சி, ஜூன் 2 –
திருச்சியில் நீதிக்கட்சி தலைவர் சர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் 138வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்த பின் அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அதிமுகவை நான் வழிநடத்துகிறேன் என்பது தவறான தகவல் என்றும், அதிமுகவில் நடக்கும் பிரச்சனைகளை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பார்த்துக் கொள்வார் என்றும் அவர் கூறினார். அதிமுகவில் நடக்கும் பிரச்சனைகளுக்கு தான் காரணம் என சிலர் கூறுவதை சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.
பழ கருப்பையா தேவையில்லாமல் பேசுகிறார் என்றும், இந்திய பொருளாதாரத்திற்காக அவர் என்ன செய்துள்ளார் என்றும் கேள்வி எழுப்பினார். இறைவன் வாயைப் படைத்தான் என்பதற்காக எது வேண்டுமானாலும் பேசக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.



