வேலூர்_26
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு சரவண தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. திருவோணத்தை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் அர்த்த மண்டபத்தில் பக்தர்கள் முன்னிலையில் எழுந்தருளினார். இதையடுத்து சிரவண தீபத்தை ஏற்றி அதை பின்பக்கமாக ஒருவர் தலையில் வைத்து அதை அனைவரும் பின்பக்கமாக மூன்று முறை சுற்றி வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் பக்தர்கள் கூட்டம் திரளாக கலந்து கொண்டு ஶ்ரீபக்த ஆஞ்சநேயரை வழிபட்டனர். ஶ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு (மூலவர்) துளசி, வெற்றிலை மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இந்த திருவோண சிரவண தீப சிறப்பு பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஶ்ரீரங்கம் ஶ்ரீகண்ணன் பட்டாச்சாரியார் சிறப்பாக செய்திருந்தார். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கேசரி, புளியோதரை, சுண்டல், அனைத்து விதமான கனிகளை கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு நிறைந்த பழக்கலவை பிரசாதம் (ஃபுரூட் சாலட்) மற்றும் புஷ்பம், சந்தனம், செந்தூரம், குங்குமம், துளசி பிரசாதங்களாக வழங்கப்பட்டன.



