நாகர்கோவில் ஆக 5
குமரி மாவட்ட அண்ணா பொது தொழிலாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டமானது நான்காம் தேதி காலை 10 மணிக்கு அஇஅதிமுக மாவட்ட தலைமைக் கழக அலுவலகத்தில் வைத்து மாவட்டக் கழகச் செயலாளர் தளவாய் சுந்தரம் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்றது.
தொழிற்சங்க மாவட்ட தலைவர் நாகசாயி வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டமானது தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வைகுண்ட மணி, கழக மாவட்ட துணைச் செயலாளர் சுகுமாரன், பகுதி செயலாளர்கள் ஜெயகோபால், முருகேஸ்வரன், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் அக்ஷயா கண்ணன், வர்த்தக அணி மாநில இணை செயலாளர் ராஜன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் ரபீக், ஒன்றிய செயலாளர் தாமரை தினேஷ், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராஜா ராம், ஆட்டோ பிரிவு மாவட்ட செயலாளர் சாகுல் அமீது, ஆட்டோ பிரிவு மாவட்ட பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் தொழிலாளிகளுக்கு நல வாரியம் சார்பாக அரசின் நலத்திட்டங்களை பெற்றுக் கொடுப்பது எனவும், நலவாரிய பயன்கள் தேவைப்படும் தொழிலாளிகள் தொழிற்சங்க மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொள்ள கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணை செயலாளர்கள் சுரேஷ்குமார், பாதுஷா, மீனவரணி இணைச் செயலாளர் பசலியான் நசரேத், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவர் மாசனம், ஆட்டோ பிரிவு மாவட்ட நிர்வாகிகள் நடேஷ், முருகன், ஜான் ரோஸ், பிரிட்டோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.