குளச்சல், மே- 19.
குளச்சல் அருகே உள்ள பிள்ளைத்தோப்பு பகுதி வின்சென்ட் நகரை சேர்ந்தவர் அமல்ராஜ் (49). மீன்பிடி தொழிலாளி. இவர் நேற்று இரவு வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்தி இருந்தார். பின்னர் இன்று காலை பார்த்த போது அவரது பைக் நிறுத்தி இருந்த இடத்தில் காணவில்லை.
மர்ம நபர்கள் யாரோ பைக் திருடி சென்றது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூபாய் 50 ஆயிரம் என கூறப்படுகிறது. இது குறித்து அமல்ராஜ் வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு போன பைக்கை தேடி வருகின்றனர்.


