களியக்காவிளை, செப். 22 –
குமரி மாவட்டம் வருகை தந்த இந்து முன்னணி மாநில தலைவருக்கு கிள்ளியூர் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் சாங்கையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த நவராத்திரி உற்சவ மூர்த்திகள் இரு மாநில பாரம்பரிய வரவேற்பு நிகழ்ச்சில் கலந்து கொள்ள இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்ரா சி. சுப்பிரமணியம் ஜி வருகை தந்தார். அவருக்கு இந்து முன்னணி கிள்ளியூர் ஒன்றியம் சார்பாக ஒன்றிய தலைவர் ஆனந்த் தலைமையில் ஒன்றிய பொதுச்செயலாளர் கோட்டகம் செல்வின் முன்னிலையில் சாங்கை பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர்கள் கணேஷ் நாகராஜ் தவசிமணி வில்சன் மற்றும் இந்து முன்னணி மாவட்டம் பொறுப்பாளர் மற்றும் ஊர் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அதனை தொடர்ந்து நிறைவுநிகழ்சி இந்து முன்னணி மாவட்ட சிறப்பு செயர்குழு மார்த்தாண்டம் குறும்பேற்றி ஹாலில் வைத்து நடைபெற்றது.



