ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில், புதுடில்லி,அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மூன்று நாள்,”மகளிர் மேம்பாட்டு திறன் சுயதொழில் பயிற்சி ” வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
துணைவேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் வி.வாசுதேவன் முன்னிலை வகித்தனர்.
நாகர்கோவில்,தமிழ்நாடு பட்டு வளர்ச்சி துறை இளநிலை ஆய்வாளர்,ச.சித்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சிகளை துவக்கி வைத்தார்.
அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி நிறுவன புராஜக்ட் திட்ட முதன்மை ஆய்வாளர், பயோடெக்னாலஜி
பேராசிரியர் எல்.முத்துலட்சுமி பயிற்சியை வழங்கி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
விருதுநகர் மாவட்ட சுய உதவிக்குழு மகளிர் 40 பேர் பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர்