கிருஷ்ணகிரி,மார்.15- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதிக்கு உட்பட்ட ஜெகதேவி பைபாஸ் அருகில் திமுக புதிய கொடிகம்பம் கொடியேற்று விழா, திமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ. கே. கிருபாகரன் தலைமையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் எம் எல் ஏ கலந்து கொண்டு புதிய கொடிகம்பத்தில் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி ஜெயலலிதா சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது’: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார், பெண்களுக்கு மாதம் மாதம் 15 ஆம் தேதி ஆயிரம் ரூபாய் உங்கள் அக்கவுண்டிற்கு வந்துவிடுகிறது. விடுபட்டவர்களுக்கு விரைவில் அவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.இதேபோல் படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம்ங வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் இப்படி பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செய்து வருகிறார். வருகின்ற 2026 இல் சட்டமன்ற தேர்தலில் உங்கள்ங பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறினார். இதைத் தொடர்ந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.கே.கிருபாகரன் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் அறிஞர், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் டேம் வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி.நாகராஜ், ஒன்றிய துணை செயலாளர்கள் ராஜ் (எ)ராஜதுரை, மீனாட்சி தங்கமணி, சுரேஷ், மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன், கிருஷ்ணன் ,மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் எஸ்.பாலாஜி, மாவட்ட ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் ரூபேஷ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் லட்சுமி பிரியா, ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் நவீன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நெடுஞ்செழியன் மற்றும் நவாப், அனீஸ், பரான், வல்லரசு, மாதேஷ், பாபு, ஜோதி,ரமேஷ், ராமமூர்த்தி,நஞ்சுண்டன், நந்தகுமார், மஞ்சுளா, அப்பு, ரேவதி, தொமுச கனகராஜ், குமார், அருள் சுப்பிரமணியன் உள்பட 500-க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



