சிவகங்கை மாவட்டம் முழுவதும், நீர்நிலைகளை மேம்படுத்துவதற்கென மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் தங்களது பங்களிப்பினை அளிப்பதற்கு ஏதுவாக, www.sivagangapunalvalam.in என்ற புதிய இணையதளத்தினை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், மாவட்டஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கா.வானதி, பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறையை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



