தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் ராணி ஸ்ரீகுமார் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் சங்கரன்கோவில் கௌரிசங்கர் தியேட்டர் ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ மற்றும் எம்பி ராணி ஶ்ரீ குமார் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக அந்த பகுதிக்கு வந்த வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தென்காசி எம்பி ராணி ஸ்ரீ குமாருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர் நிகழ்வில் நகர செயலாளர் மு. பிரகாஷ். மற்றும் திமுகவினர் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



