மார்த்தாண்டம், மே. 24-
கொல்லங்கோடு அருகே கூத்தம்விளை என்ற பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் மனைவி லலிதா (69). இவர் நேற்று நடைக்காவு பகுதியில் உள்ள சந்தைக்கு சென்று விட்டு பொருட்கள் வாங்கினார். பின்னர் வீட்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். வெள்ளம் கெட்டி என்ற இடத்தில் வைத்து ஆட்டோவில் இருந்து எதிர்பாராத விதமாக லலிதா தவறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த வரை உடனே மீட்டு அவர் பயணித்த ஆட்டோவில் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் லலிதா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இது சம்பந்தமாக மகன் சதீஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.