கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, படப்பள்ளி கிராமத்தில் 120 குடும்பங்கள் வசித்து வசித்து வருகின்றனர். பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த, 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி, தற்போது பழுதடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் விழும் அபாய நிலையில் உள்ளது. இதனை அகற்ற கோரி அப்பகுதி கிராம மக்கள் ஊத்தங்கரை பீ.டி.ஓ., அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும், மேலும் கிராம சபை கூட்டத்தில் சேதமடைந்து கிடக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என மனு கொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி, எப்ப விழுமோ என்ற அச்சத்தில் உள்ளனர் பகுதி பொதுமக்கள். உயிர் பலி வாங்கும் முன் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



