கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை வழக்கம் போல் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்களுக்காக வந்திருந்த நிலையில் அப்போது எதிர்பாராத விதமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் பழைய பொருட்கள் வைப்பு அறை பகுதியில் சுமார் 6 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு ஒன்று உதிர்ந்ததைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் பதறி ஓடினர் இதனை தொடர்ந்து ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் லாபகமாக பாம்பை பிடித்தனர் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலக பகுதியில் பழைய வாகனங்களும் குப்பை கூலும் செடி கொடிகளும் சூழ்ந்து இருப்பதால் இந்த பகுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக குற்றச்சாட்டு இருக்கின்றனர் எனவே வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள செடி கொடிகளை அகற்றி பழைய வாகனங்களையும் அகற்றி அலுவலகத்தை தூய்மையாக வைத்திருந்து வரும் பொது மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்



