By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.500.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > ரூ.500.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள்
தருமபுரிமாவட்டம்

ரூ.500.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள்

Last updated: July 12, 2024 5:22 pm
July 12, 2024 55 Views
Share
SHARE

தமிழ்நாடு முதலமைச்சர் தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் ரூ.500.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள் மற்றும் உதவிகளை துவக்கி வைத்து 15 புதிய அறிவிப்புகளுக்கு ஆணை 

 

மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கி வைக்க தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.

 

தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மனுக்களை பெற கிராமப் புறங்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்டம் தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளிகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

 

இதனை தொடர்ந்து 444.77 கோடி மதிப்பில், பல்வேறு துறைகளின் சார்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்ட பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் திறந்து வைத்தார், தொடர்ந்து 2637 பயனாளிகளுக்கு சுமார் 56.04 கோடி மதிப்பில் நலத்திட்ட வழங்கினார்.பின்னர் 20 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

 

மேலும் தருமபுரி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து 7 புதிய அறிவிப்புகளை அறிவித்தார். அத்துடன் தருமபுரி மாவட்ட மக்களின் கோரிக்கைகளை ஏற்று

மேலும் 8 புதிய அறிவிப்புகள் என மொத்தம் 15 புதிய அறிவிப்புகளை தருமபுரி மாவட்டத்திற்கு  செயல்படுத்திட ஆணை பிறப்பித்துள்ளார். 

 

தருமபுரி மாவட்டத்திற்கான 15 புதிய அறிவிப்புகளின் விவரங்கள்: 

 

1. 51 கோடி ரூபாய் செலவில் அரூர் அரசு மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

2. கடந்த சட்டமன்றத்தேர்தல் பரப்புரையின்போது கொடுத்த வாக்குறுதியான தருமபுரி – வெண்ணம்பட்டி சாலையில், புதிய ரயில் மேம்பாலம் 38 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

3. மோபிரிபட்டி–தொட்டம்பட்டியை இணைத்து, “அரூர் பேரூராட்சி”,

“அரூர் நகராட்சியாக” தரம் உயர்த்தப்படும்.

4. பஞ்சப்பள்ளி, ராஜபாளையம் அணைக்கட்டுகள் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.

5. சிட்லிங், அரசநத்தம் பகுதியில் பழங்குடியினர் உற்பத்தி செய்யும் ராகி, சாமை, வரகு ஆகியவற்றை மதிப்புக் கூட்டுப் பொருளாக்க கிடங்கு மற்றும் பொதுச் செயலாக்க மையம் அமைக்கப்படும்.

6. தீர்த்தமலையில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கப்படும்.

7. இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும், பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பழுதடைந்த நிலையில் இருக்கும் 4 வகுப்பறைகள், அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.

8. தருமபுரி ஒன்றியத்தில் உள்ள பெரியபட்டி மற்றும் வெள்ளாளப்பட்டி ஊராட்சிகளில், 2.54 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், அரூர் ஒன்றியத்தில் சிட்லிங் கிராமம், அம்மாப்பேட்டை, மருதிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் 3.82 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் 6 கோடியே 36 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாயக் கூடங்கள் கட்டப்படும்.

9. மொரப்பூர் மற்றும் அரூர் பகுதிகளில் உள்ள தனியார் கட்டடங்களில் செயல்பட்டு வரும் 7 குழந்தைகள் மையங்களுக்கு புதிய கட்டடம் கட்ட மையம் ஒன்றிற்கு தலா 16 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் என மொத்தமாக,

ஒரு கோடியே 17 இலட்சம் ரூபாய் செலவில் 7 புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

10. கம்பைநல்லூர் பேரூராட்சியில் 6 வார்டுகளில் உள்ள 5 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், இருமத்தூர் தென்பெண்ணை ஆறு தலைமை நீரேற்று நிலையத்திற்கு அருகில் புதியதாக திறந்தவெளி கிணறு அமைத்து, நீரேற்று குழாய் அமைக்கப்படும். மேலும் பேருந்து நிலையம் அருகில், கூடுதலாக 1.00 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி, 4.1 கி.மீ நீளத்திற்கு குடிநீர் பகிர்மான குழாய் அமைத்து, 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இக்குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்படும்.

11. அரூர் ஊராட்சி ஒன்றியம், பறையப்பட்டி புதூர் முதல் பறையப்பட்டி காலனி வரை, கணபதிப்பட்டி தார்சாலை மற்றும் வீரப்பநாயக்கன்பட்டி தார்ச் சாலைப் பணிகள் மற்றும் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், போளையம்பள்ளி முதல் கோபிநாதம்பட்டி செல்லும் தார்ச் சாலை ஆகியவை 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும்.

12. கீரைப்பட்டி – கெளாப்பாறை சாலையில் உள்ள பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று, கெளாப்பறை ஆதிதிராவிடர் காலனி மயானம் செல்லும் சாலையில், வரட்டாறு ஓடையின் குறுக்கே 50 இலட்சம் ரூபாய் செலவில் பாலம்  கட்டப்படும்.

13. சிட்லிங் ஊராட்சி, நாட்டான்வளவு முதல் கம்பாளை சாலைக்கு இடையே, பழங்குடியின மக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று, காட்டாற்று ஓடையின் குறுக்கே ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைக்கப்படும்.

14. அரூர் சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பறையப்பட்டி புதூர் ஊராட்சி ஜி.கே.ரோடு கிராமத்தில் ஒரு புதிய 30,000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், இருமத்தூர் ஊராட்சி, போளையம்பள்ளி ஊராட்சி, மொரப்பூர் ஊராட்சிகளில் மூன்று இடங்களில், மூன்று 60 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் கட்டப்படும்.

15. பாளையம்புதூர் ஊராட்சியில் 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கோம்பை, மூலக்கோம்பை, ராஜீவ்காந்தி நகர் மற்றும் நாயக்கனேரி பகுதிகளில் இணைப்புச் சாலைகளைப் புதுப்பிக்கவும்; 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தேர்ச்சாலை மற்றும் மூலக்கோம்பை கிராமச்சாலைகளை சிமெண்ட் சாலைகளாக மாற்றவும்; தொம்பரகாம்பட்டி மேற்கு வன்னியர்தெருவில்

10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஆழ்துளைக்கிணறு மற்றும் மின்மோட்டார் ஆகியவை அமைக்கவும் – ஆக மொத்தம் 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்குறிப்பிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி.சாந்தி,தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர்.ஆ.மணி,டி.எம். செல்வகணபதி தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி,தருமபுரி மேற்கு மாவட்ட திமுக  செயலாளர் முனைவர்.பி.பழனியப்பன், தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி  ராஜ்குமார்,கோட்டாட்சியர் காயத்ரி,மற்றும்,அரசு அதிகாரிகள்,பயனாளிகள் கலந்து கொண்டனர்.

You Might Also Like

பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்

காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை

திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
Blog

தேசிய தர நிர்ணய சான்றிதலுக்கான மதிப்பீட்டாய்வு

April 26, 2025 27 Views
இளையான்குடி பேரூர்க்கழக திமுக சார்பில் மாபெரும் நீர்மோர் பந்தல் திறப்பு விழா
தோவாளை அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா
பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை
50 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?