திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவி உபகரணங்கள் மதிப்பீட்டு முகாம்
மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் N. சாமிநாதன் மற்றும் இளநிலை மறுவாழ்வு அலுவலர் K.தாமோதரன் ஆகியோர் தலைமையில்
நடைபெற்றது.
நிகழ்ச்சியில்
மத்திய அரசின் கீழ் மூன்று சக்கர சைக்கிள்,சக்கர நாற்காலி,மூளை முடக்குவாத சிறப்பு சக்கர நாற்காலி காதொலி கருவி,ரோலேட்டர் , பிரைடல், மற்றும் அதிரும் ஊன்றுகோல் ஆகிய உபகரணங்கள் பயனாளிகளின் தேவைக்கேற்ப கண்டறிந்து
அவர்களுக்கான உபகரணங்கள் 15 நாட்களுக்குப் பின் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதில் 100 க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு
பயன் பெற்றனர். மாற்றுத்திறனாளிக்கான உபகரணங்கள் அலிம் கோ நிறுவனம் சார்பில் வழங்கப்படவுள்ளது.என தெரிவிக்கப்பட்டுள்ளது.



