தஞ்சாவூர், மே 25 –
தஞ்சாவூர் பெரிய கோவில் அகழிகள் தூய்மைப்பணி நடைபெறுவதை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை பராமரிப்பு நிதி உதவியுடன் நீர் நிலைகள் பாதுகாக்கவும், அவசர கால பேரிடர் மீட்பு பணிகளை மேலும் துரிதப்படுத்தவும், ரூபாய் 3.50 கோடியில் ஏழு புதிய பொக்லைன் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த எந்திரங்கள் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் நீர் வழித்தடங்களில் தூர்வாருதல், கருவேலை மரங்கள் அகற்றுதல், முள் மற்றும் புதர்களை நீக்குதல் போன்ற பணிகளும், பேரிடர் கால அவசர மீட்பு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
அதன் அடிப்படையில் தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் மாநகரை சுற்றியுள்ள அகழி நீர்வழி பாதையில் காணப்படும் கருவேல மரங்கள் முட்புதர்கள், ஆகாய தாமரை செடிகள் அகற்றும் பணி கடந்த 16ம் தேதி தொடங்கியது. இதற்கிடையில் தஞ்சாவூர் பெரிய கோவில் அகலியில் தூய்மை பணி நடைபெறுவதை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறும் போது: தஞ்சாவூர் பெரிய கோவிலின் பின்புற மேற்கு பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் அகளி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பெரிய கோவிலில் பின்புற பகுதிகளில் தூய்மை பணியை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு நிதியின் மூலம் வாங்கப்பட்ட பொக்லைன் இயந்திரங்களின் டீசல் டிரைவர் ஊதியம் பராமரிப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட செயல்பாட்டு செலவுக்காக பெரிய நிறுவனங்களின் சமூக பொறுப்பு நீதி நன்கொடையாளர்கள் பொதுமக்கள் பங்களிப்புடன் இந்த நீர் வழி மீட்பு பணி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பால கணேஷ் இந்திய தொல்லியல் துறை உதவி பொறியாளர் சரவணன், உமேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்



