தஞ்சாவூர். மார்ச்.22.
தஞ்சாவூர் பனகல் கட்டிடம் எதிர்புறம் தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர் சங்கம் மகப்பேறு இருப்பில் உள்ள செவிலியர்களுக்கு 365நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கிட கோரியும், தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
மேலும் மருந்து கையிருப்பு கணக்கெடுக்கும் பணியை செவிலியர்கள் மீது திணிக்க கூடாது எனவும் தற்காலிக செவிலியர்களிடம் பிற ஊழியர் களது பணிகளை செய்ய நிர்பந்திக்க கூடாது எனவும் சஞ்சீவனி திட்டத்தில் செவிலியர் தனது பணியை தவிர பிற ஊழியர்கள் பணியை செய்ய நிர்பந்திக்க கூடாது எனவும், பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சேவைகளை மீண்டும் செயல்படுத்தக் கோரியும் ,ஒவ்வொரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் 6 செவிடர்களை பணியர்மத்திடவும் எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருக்கும் 5 சதவீத ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்கிடவும் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்து செவிலியர் களுக்கும் மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருக்கும் 5 சதவீத ஊதிய உயர்வை நிலுவை தொகை வழங்கிட கோரியும் 11 மாத கால ஒப்பந்த முறையில் பணியமர்த்தப் பட்ட செவிலியர்களுக்கான 11 மாத கால ஒப்பந்த முறையில் ரத்து செய்து அவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிடவும்,108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்,பொதுமக்கள் நல்லுறவு சங்கம் தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம் ஆகியன இணைந்து மாநில துணைத் தலைவர் பிரிம் ரோஸ் இசபெல்லா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ஜெயந்தி,மாநில இணை செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநிலத் துணைத் தலைவர் சிந்தன் சிறப்புரையாற் றினார் கிளை சங்க செயலாளர் சாந்தி தேவி, இணைச் செயலாளர் ஜெகதீஸ்வரி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்,பொதுமக்கள் நல்லுறவு சங்கம் சண்முகசுந்தரம் நன்றி உரையாற்றினார்.



