தஞ்சாவூர் டிச.23
தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது
கூட்டத்தில் சிறுபான்மை ஆணைய தலைவர் ஜோஅருண் தலைமை தாங்கினார்.
சிறுபான்மையினர் ஆணைய அரசு கூடுதல் செயலர் சுரேஷ்குமார் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் ஆணைய குழு துணை தலைவர் அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் ஜோ அருண் கூறியதாவது:
சிறுபான்மையினரின் பிரச்சனைகளை கண்டறியும் பொருட்டு மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளை பார்வையிட்டு நலத்திட்டங்களை திறம்பட செயல்படுத்த அரசுக்கு தக்க பரிந்துரை ஆணையம் செய்து வருகிறது என்றார்.
பின்னர் ஆணைய தலைவர் ஜோஅருண் கிறிஸ்தவ தேவால யம் பழுது பார்த்தல் மற்றும் புரை மைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி தொகையாக ஒரு பயனாளிக்கு ரூபாய் 8 லட்சத்து 73 ஆயிரத்து 750 டாம்கோ மூலம் கடன் உதவியாக 5 பேருக்கு ரூபாய்1 லட்சத்து 90 ஆயிரமும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் 26 பயனாளிகளுக்கு ரூபாய்1 லட்சத்து 14ஆயிரம் மதிப்பி லான நலத்திட்ட உதவிகளும், 19 கிறிஸ்தவ நலவாரிய உறுப்பினர் களுக்கு அடையாள அட்டையும், மாவட்ட தொழில் மையம் மூலம் 7 பேருக்கு ரூபாய் 4 கோடியே 59 லட்சத்து 5 ஆயிரத்து 810 மதிப்பி லான நலத்திட்ட உதவி என மொத்தம் ரூபாய் 4 கோடியே 71 லட்சத்து 83 ஆயிரத்து 560 மதிப்பி லான நலத்திட்ட உதவிகள் 58 பேருக்கு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம், மேயர்கள் சண்.ராம நாதன் ,சரவணன் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் கும்பகோணம் உதவி ஆட்சியர் ஹிருத்யா விஜயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி மாநகராட்சி ஆணையர் கண்ணன், லட்சுமணன் வருவாய் கோட்டாட்சியர்கள் இலக்கியா, ஜெயஸ்ரீ மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்நல அலுவலர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்