நீலகிரி. மார்ச். 14.
நீலகிரி மாவட்டம் கேத்தி சாந்தூர் பகுதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 56 பயனாளிகளுக்கு ரூபாய் 1.96 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு…
நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட சாந்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு கலந்துகொண்டு பல்வேறு அரசுத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து
56 பயனாளிகளுக்கு ரூபாய் 1.96 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
மேலும் இதில் அரசு
துறை அலுவலர்கள் பொதுமக்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் இதனை பொதுமக்கள் முறையாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளும்படி அரசு துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.